மௌனம் உடைத்து பேசு

கனவுகள் எனும் ஒன்றை மறந்தே போனேன் !
உறக்கம் வந்தால் தானே உன்னைப்பற்றி கனவு காண
நினைவால் தானே நித்தம் நெஞ்சம் உருகி சாகிறேன் !

காற்றில் கலந்தே போக கடவுளிடம்
வரம் ஒன்றை கேட்கிறேனேடி !
உன் மூச்சுக்காற்றை தழுவிக்கொள்ளும் ஆசையில் !

காதல் உன் மேல் கொண்டேனடி ! கடல் அளவா !
மலை அளவா ! வான் அளவா ! மூன்றுமே சேர்ந்த
மொத்த அளவாய் முழுதாய் எனக்குள் நிரம்பி
உன் நினைவு அடர்த்தியில் நெஞ்சமெல்லாம் தவிக்குதடி !

மல்லிகையாய் நித்தம் உருவெடுத்து
பிறக்க வரம் கேட்கிறேனடி
உன் கூந்தல் வாழ்ந்து மடியலாம் என்று !

இயல்பாக இருந்தவனை இப்படியா !
சுனாமியாய் வந்து சுருட்டி
உனக்குள் இழுத்துக்கொள்வாய் !

இதயத்தின் துடிப்பை நிறுத்தி
இன்றே இறந்துவிடலாம் என
தோன்றுகிறது..!



உன் மடிசாய்ந்து கதறி அழ தோன்றுகிறது
என் கன்னங்களில் வழிந்தோடும்
கண்ணீர் துடைக்க நீ வரவேண்டும் !

என் காதல் புரிந்தவளாய் என் காயத்திற்கு மருந்திட
உன் வார்தை வரம் வேண்டும் எனஇதயம் உன்னிடம் கெஞ்சவே
தோன்றுகிறது

கெஞ்சி கதறுகிறேன் என் நெஞ்சம் வெடித்து சாவதற்குள்
என்னோடு பேசி விடு !

இல்லையேல் உன் மடி படர்ந்து
நிம்மதியாய் சாக
எனக்கு பேரின்ப வரம் கொடு !

உடனே வருகிறேன் !

எழுதியவர் : முபா (7-Sep-17, 10:51 am)
Tanglish : mounam udaithu pesu
பார்வை : 641

மேலே