என் ஆசிரியர்களுக்கு

அகங்கையில்
ஆதரவளித்து,
இமயமாய்
ஈடேற,
உமை
எமக்களித்து,
ஏணிகளானீரே.....
ஐயமின்றி
ஒருமனதாய்-உம்
ஓதலின்
ஔவியராவேன்....
ஆம்,
கசடினைக் களைந்து
காங்கியைப் போக்கி
கியாதி பெருக
கீழ்மை நீக்கி
குச்சிதம் அகற்றி
கூடா நட்பின்
கெடுதி உணர்த்தி
கேண்மையின் மேன்மையை ஒப்பனை செய்து
கைத்தாயாய்
கொஞ்சி,கொடுவினை மாய்த்து
கோபுரமாய் உயர,கோமளமான
கௌலராய்
உம்மால் உருவாக்குவேன் என் மாணவரை

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (9-Sep-17, 9:09 pm)
பார்வை : 164

மேலே