தன்னம்பிக்கை

இருளா னாலும் இருக்கட்டும்.

கதிர் வரும் கொஞ்சம் பொறுக்கட்டும்.

அதுவரை மனமே இறுகட்டும்.

எதிர்படும் தடைகள் உடையட்டும்.

உன் கரங்கள் மலையைப் பிளக்கட்டும்.

கடலா னாலும் கடக்கட்டும்.

காற்றையும் கொஞ்சம் கிழிக்கட்டும்.

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (10-Sep-17, 10:50 am)
Tanglish : thannambikkai
பார்வை : 2911

மேலே