வரவு

என்னவனே!
வானம் பலமாகச் சிரித்தது
மின்னல் ஒளி வீசியது
கருமேகம் அழுதது
கரியநிறம் நீங்கியது
வண்ணமான வானவில்
வானத்தில் வளைந்தது
முல்லையும் மல்லியும்
முத்துப்போல் பூத்தது
குளிர்ந்த தென்றல்
இதமாகத் தழுவியது
இவையெல்லாம் நிகழ்ந்தது
உன் வரவை எண்ணியோ!!!

எழுதியவர் : Priyakarthikeyan (10-Sep-17, 3:28 pm)
Tanglish : varavu
பார்வை : 110

மேலே