ஒரு கடிதம் எழுதினேன் -- நிலைமண்டில ஆசிரியப்பா
ஒரு கடிதம் எழுதினேன் -- நிலைமண்டில ஆசிரியப்பா
கடிதம் ஒன்றினை கடிதினில் எழுதினேன்
விடியும் காலையில் விரைந்துமே வருகவே !
மிடிகள் போக்கி மின்னல் போலவும்
அடிதனை எடுத்தே அன்னமாய் நடைதனில்
வடித்தச் சிற்பம் வாட்டம் போக்கவே
மடிதனில் கிடத்தி மார்பில் சாய்ந்திட
முடிந்த வாழ்வில் முத்தமும் பதிக்கவும்
படிவாய் மன்னவா பதியாய் என்றுமே !
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்