நம்பிக்கை

உச்சிக்கிளையிலிருந்து
வேகமாய் சொட்டும் ஒரு துளி நீர்
அவ்வழி கடந்த எறும்பு
வாயில் கவ்விச்சென்ற ஒற்றை பருக்கை மேல் விழ
அது சில்லு சில்லாய் சிதறியது
எந்த சோர்வும் இல்லாமல்
எல்லா துகளையும் சேகரித்து
மீண்டும் தொடர்ந்தது பயணத்தை ...............
எறும்பின் ஒரு நாள் வாழ்க்கையை உணர்ந்தால் நம்பிக்கை தானாய் பிறக்கும் மனிதன் வாழ்வில் ...........

எழுதியவர் : ரேவதி மணி (22-Sep-17, 10:15 am)
Tanglish : nambikkai
பார்வை : 80

மேலே