மழையும் அவள் போலே
அவன் சில விரல் தூரம் போனதுமே
அவள் சலங்கையில் மீண்டும் ஈர்ப்பது போல்
ஜன்னலை அடைந்திட முற்படுமுன்
பொழிமழை அழைத்தது வீரியமாய்
அவள் அறை கதவினில் இவன் விரல்கள்
புது ஒரு தாளம் அமைப்பதுபோல்
அடைக்கதவின் மீதினிலே
மழை கரங்கள் மோதிடுதே