வருமா
காத்திருக்கிறது கொக்கு,
கானல்நீராம் வாழ்வை எண்ணி..
முன்பு
குளம் வறண்டபோது,
குடிக்கக்கூட நீரின்றி
காத்திருந்தது-
குளத்தில் தண்ணீருக்காக..
தண்ணீர் வந்தது,
குடித்துவிட்டு
நீரில்
நிலையாய் நின்று
காத்திருக்கிறது இப்போது-
மீனுக்காக..
வருமா,
வாழ்க்கையது கானல்நீரா...!

