வருமா

காத்திருக்கிறது கொக்கு,
கானல்நீராம் வாழ்வை எண்ணி..

முன்பு
குளம் வறண்டபோது,
குடிக்கக்கூட நீரின்றி
காத்திருந்தது-
குளத்தில் தண்ணீருக்காக..

தண்ணீர் வந்தது,
குடித்துவிட்டு
நீரில்
நிலையாய் நின்று
காத்திருக்கிறது இப்போது-
மீனுக்காக..

வருமா,
வாழ்க்கையது கானல்நீரா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Oct-17, 7:41 am)
Tanglish : varumaa
பார்வை : 81

மேலே