மூவண்ணத்தில்இருவண்ணங்களைக்காணும்

என்ன கொடுமை
என் இந்தியத்தாயே 
என்ன கொடுமை 
நீ கட்டியிருந்த 
மூவண்ண சேலையில் 
வெள்ளையும் காணும் 
பச்சையும் காணும் 
காவி மட்டும்தான் 
பரவியிக்கிடக்கு 
அதனால் தான் என்னவோ 
பலக்கோடிமக்கள் 
பதறிக்கிடக்கு 
நீ எப்பொழுது மீண்டும் 
மூவண்ணம் உடுத்துவாய் 
உன்வண்ணங்களை
மறைத்த அரசியல்
மதவெறியர்களை
எப்பொழுது துரத்துவாய்
மனிதநேயத்தையும்
சமூகஒற்றுமையும்
இவ்வுலகம் காண
வானுயர எப்பொழுது
உயர்த்துவாய்

எழுதியவர் : சூரியன்வேதா (4-Oct-17, 12:37 am)
பார்வை : 190

மேலே