அந்தக் கமலங்கள்

கருத்தொருமித்த காதலர்கள்,
கருத்தொருமிக்காத சமூகம்..

சாதி செய்த சதியில்
மூழ்கியது காதல்,
மிதந்தனர் குளத்தில்-
பிணமாய்..

இன்று-
இணைந்தனர்
இரு செங்கமலங்களாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Oct-17, 6:48 am)
பார்வை : 103

மேலே