பூந்தோட்டத்துக்குள் நான்

ஒற்றை ரோஜாவையே
ஓய்வு எடுக்காமல்
ஓராயிரம் நிமிடங்கள்
பார்த்துக் ரசிக்கும்
என் விழிகள்

ஒரு ரோஜா
பூந்தோட்டத்துக்குள்
நுழைந்தால் அது
என்ன செய்யும்
திக்குமுக்காடித் தான்
போகிறது

என் ரோஜாவுக்காக
நான் காத்திருக்கும்போது

வகுப்பறையை விட்டு
வெளியே வரும்
மழலை பூக்களின்
மந்திர வாசனையும்
வெள்ளை சிரிப்பும்
ஒரு நிமிட
சொர்கத்தை காட்டி
என்னை இதமாய்
எதுவோ செய்க்கிறது

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (6-Oct-17, 10:55 pm)
பார்வை : 261

மேலே