தமிழ் தாயை உலக அறங்கிள் புது ஒப்பனையுடன் அமரஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை

தமிழ் உறவுகள் ஒரு 15 நிமிடம் ஒதுக்கி இக்கட்டுரையை படிக்கவும்.......தமிழ் தாயை உலக அறங்கில் புது ஒப்பனையுடன் அமர....ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை...........


மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் திருஞானசம்மந்தம் அவர்களுக்கு தமிழ் இனம் உள்ளவரை உங்களை மறவாது இனி ஒரு புது உலகம் படைப்போம்.......


அன்புள்ள என் தமிழ் உறவுகளுக்கு,

இனியன் தமிழன்பனின் இனிய வணக்கம், சில வருடங்களுக்கு முன்பும், சில நாள்களுக்கு முன்பும்,சில அச்சு ஊடகங்களிலே துண்டு செய்தியாய் வந்திருக்கும்,நம்மில் எத்தனைபேர் அதை கவனித்திற்போம் தெரியவில்லை.
உலகின் முதல்நிலை மற்றும் 350 வருட பழமையன பல்கலைக்கழகம் "ஹார்வர்டு பல்கலைக்கழகம்".அதில் தமிழ் மொழிக்கு இருக்கை கேட்டு 20 வருடங்களுக்கு மேல் பல கட்ட முற்சிகள்,தற்பொழுதுதான் அதற்கு ஒரு விடிவுகாலம்.
3000 ஆண்டுகள் பழமையான மொழியால் சற்று தாமதத்துடன் அனுமதி வழங்கி பெருமை தேடிக்கொண்டது ஹார்வர்டு,அதற்க்கு தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகள்,பாராட்டுகள்.
ஹார்வர்டு இருக்கையால் என்ன பயன்:
==========================================
அயல் மொழி மோகத்தால் உள்ளூர் தமிழனாகிய நாமே தமிழை பாதி கொன்றுவிட்டோம்,இருக்கும் மீதியை....?இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் மொழி குறித்த புரிதல்,தாய் மொழி பற்று இல்லை என பரவலான ஒரு கருத்து,அதில் உண்மை இல்லாமல் இல்லை,
ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கையால் நாம் பெறுவது.
1.தமிழ்த்தாய் -புதிய அரியணையில்,நம் மார்தட்டி பெருமிதம் கொள்ளாலம்.
2.தொல்காப்பியரையும்,இளங்கோவடிகளையும்,வள்ளுவரையும், கபிலரையும்,கம்பனையும்,ஔவையும்,இன்னும் பலரையும் மீண்டும் அறிமுகம் செய்யலாம்.
3.ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையால் தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு தலமை ஏற்க ஒரு தமிழன்.
4.கீழடி போன்ற தமிழ் மொழி,பண்பாடு சார்ந்த ஆராய்ச்சிகள்,அதன் வாயிலாக உலகிற்கு மூத்த குடி தமிழ் குடிதான்,அதுவும் நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழ் குடி போன்ற உண்மையை தைரியமாக உலகிற்கு உரைக்கும் நிலை.
5.நம் அயல்நாடு வாழ்தமிழ் குழ்ந்தைகளுக்கு தமிழ்மொழி பற்றிய புரிதல்,தமிழ் கற்க ஏற்ற சூழல்

என்ன செய்ய போகிறோம் நாம்:
==================================
*ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஆகும் மொத்த செலவு 6 மில்லியன் அமொரிக்க டாலர்,இந்திய ரூபாயில் 40 கோடி.
* 1 மில்லியன் டாலரை செலுத்தி தமிழ் இருக்கையை உறுதி செய்து உள்ளனர் மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் திருஞானசாம்பந்தம்.
* மீதியிருக்கும் 5 மில்லியன் டாலரில் 3 மில்லியன் டாலரை நம் தமிழ் உறவுகள் திரட்டியுள்ளனர்.
* அடங்க மறுத்த சல்லிக்கட்டு காளையை அடக்கிய என் தமிழனக்கு மீதி தொகை எம்மாத்திரம்...........திரட்டுவோம் வாரிர் .

அரசும்,அரசியல் கட்சிகளும்:
=============================
*தமிழக அரசு நினைத்தால் 40 கோடியும் வழங்க முடியும்,ஆனால் ஏனோ அரசு மெளனஉறக்கத்தில்,எப்போது விழிக்கும்..........?
*தமிழக அரசியல் கட்சிகள், கட்சி நிதியிலிருந்து நிதியளித்தாலே 40 கோடி 4 நிமிடத்திலே முடியும்
.
இனையதள நண்பர்களுக்கு:
============================
*முகநூல்(facebook),சுட்டுரை(twitter),கட்செவி அஞ்சல்(whatsapp) போன்ற சமூக வலைதளங்களில் பகிர்தல்.
* உலகம் முழுவதும் உள்ள நம் 80 மில்லியன் உறவுகளுக்கு இதன் மூலம் ஒரு விழிப்பும்,அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுப்போம் வாரிர் !!!!!!!!!!!!!

என் இனிய தமிழ் உறவுகளே.......



அறச்சீற்ற மகிழ்வுடன்,
இனியன் தமிழன்பன்.

எழுதியவர் : (7-Oct-17, 8:10 pm)
பார்வை : 81

மேலே