தாய்மை

தாய்மை
.....................................
பருந்தைக் கண்டால்
பருந்தின் தூரம்வரை
பறந்தடித்து
குஞ்சிற்கு ராணுவச்சேவை வழங்கும்
கோழி.......
எசமானன்
கொடுத்த தீனியை
வட்டிப்போட்டு
பாலாக வசூலித்து கொண்டாலும்
உள்மடியில் பதுக்கி
கன்றுக்கு அமுதூட்டும் பசு.....
குயில்முட்டையா?
தன்முட்டையா?
இனபேதம் காட்டாமல்
குயிலுக்கும் சேர்த்து
அடைகாக்கும் காகம்...
வேறென்ன
தாய்மை தானே... ?
ஆனந்த் நாகராசன்
மேலவாசல்