ஆண்டவன்
ஆகாயத்தின் எல்லை யாரறிவார்
ஆண்டவனின் அறிவும் அவ்வாறே
நம்மைப்படைத்த அவன் நமக்களித்த
அறிவைக்கொண்டு அவன் உள்ளானா
- என்று ஆய்வது நமதறியாமை-அவன்
அலகிலா விளையாட்டுடையான் என்றார்
கம்பனும் அதை உணர்ந்து,வியந்து!