ஆண்டவன்

ஆகாயத்தின் எல்லை யாரறிவார்
ஆண்டவனின் அறிவும் அவ்வாறே
நம்மைப்படைத்த அவன் நமக்களித்த
அறிவைக்கொண்டு அவன் உள்ளானா
- என்று ஆய்வது நமதறியாமை-அவன்
அலகிலா விளையாட்டுடையான் என்றார்
கம்பனும் அதை உணர்ந்து,வியந்து!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-17, 7:26 pm)
Tanglish : aandavan
பார்வை : 112

மேலே