எங்கிருக்கிறாய் நண்பனே

நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!

இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!!

ஏழு வருட நம் நட்புக்குள்
ஏழு ஜென்ம பந்தம்...!
நட்ப்பென்ற ஒன்றுக்குள்
நாம் சேர்ந்து நின்றோம்..!!

நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால்
நண்பனுக்காக எதையும் செய்யும்
நண்பன் ஒருவன்
எனக்கு கிடைத்திருக்கமாட்டான்... !

நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!!

என்றாவது ஒருநாள்
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்...!
நாம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!

எழுதியவர் : (24-Oct-17, 2:07 pm)
பார்வை : 11634

மேலே