குப்பைத்தொட்டி பூக்கள்

குப்பைத்தொட்டி பூக்கள்

“குப்பை தொட்டியில் மிதக்கின்ற பூக்கள் நாங்கள்..
தாயே எறிவதற்கு மனம் வந்த உனக்கு.
எடுத்து வளர்க்க மனமில்லையோ...
இறப்பு தெரியாமல் மனிதர்கள் வாழும் இவ்வுலகில்...
பிறப்பு தெரியாமல் வாழும் உயிர்கள் நாங்கள்.
ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும்
எங்களது பசிக்குரல் கேட்கவில்லையா..

கருவறையில் மடிந்திருந்தால் குருதியாக வந்திருப்போம் தாயே ...
எங்களை போன்ற பூக்களை கிள்ளி எறிந்த காரணம் என்னவோ...
ஒருநாள் உன்னை பார்க்க வேண்டும் என்று சிந்தை துடிக்கின்றது...
ஏன் தெரியுமா?
இரக்கமில்லாத உள்ளத்தை என் அன்பால் விழ்த்துவேன்....!
"அன்பு இல்லம்" இல்லாத உலகம் வேண்டும் தாயே...!
என்று விடிக்கறதோ அன்று உனக்காக காத்திருப்பேன்....!
நீ வருவாய் என..!
இப்படிக்கு குப்பைத்தொட்டி அருகில் நிற்கும் வள்ளல் பாரி ...!”

நீதி: படிச்சா புரியாது...? அனுபவத்தின் தேடல்.

எழுதியவர் : உங்கள் வாகை மணி (30-Oct-17, 3:22 pm)
பார்வை : 118

மேலே