எனக்குள் நீ
உன் மரணத்தில்
நான் வாழ்வேனா...?
உன் பிறப்பில்
நான் இறப்பேனா...?
உன் தவிப்பில்
நான் சிரிப்பேனா...?
உன் அணைப்பில்
நான் சிரிப்பேனா...! அழுவேனா...!
அணைப்பேனா...!
எனை இழப்பேனா...!
உன் மடியில்
என் உலகை நான் மறப்பேனா...!
உன் கண்ணில்
என்னை தொலைப்பேனா...!
உன் பாதையில்
என் பயணம் பார்ப்பேனா...!
உன் ஆண்மையில்
மென்மையை நான் ரசிப்பேனா...!
உன் மார்பில் என்னை நான் புதைப்பேனா...!
உன் பெயரை
என் மூச்சாய் நானும் சுவாசிப்பேனா...!
என்னை தொலைத்து தொலைத்து
உன்னையே தேடுவேனா...!
உன் உயிரில் நான் கரைவேனா...!
உன் உயிரை நான் சுமப்பேனா...!
உன் மார்பில் நான் வீழ்வேனா...!
என் மார்பே நீ தானா...!
~ பிரபாவதி வீரமுத்து