காதல் வலி - 70

அழகே
நான் உன்னைப் பார்க்கும்போது
என் நெஞ்சம் தன்னைப்
புதுப்பித்துக் கொல்கின்றது

ஆனால்
நீ என்னைப் பார்க்கும்போதோ
என் நெஞ்சம் தன்னில்
புது பித்துக்கொள்கின்றது

நெருப்பு எரிவதில்லை தீயில்லாது
என் நெஞ்சில்
நெருப்பு எரியுதடி நீயில்லாது

கடைக்கண்ணை வைத்துள்ளாய்
அதில் காதலெனும் பொருளையேனடி
புதைத்துள்ளாய் ?

அதை விற்றுவிடு எனக்கு
விலையாய் இருபிள்ளைப்
பெற்றுத்தருகின்றேன் உனக்கு ..

காதலியே
காயாத அல்லியே
என்னைக் காயமாக்காது
உன் மனத்தைத் தா அள்ளியே .

எழுதியவர் : குமார் (1-Nov-17, 3:51 pm)
பார்வை : 741

மேலே