அம்மாவின் பிரிவு

தென்னாட்டு நெற்சோலையில் வரப்பு எங்கும் சுற்றி வந்தாயே என் அம்மா,
இன்று உன் நினைவுகள் மற்றும் தவழ்ந்து வருவது ஏனோ ,
தாயே காலையில் உதிக்கும் சூரியன்கூட இன்று தாமதமாக உதிகின்றதே
நீ வந்து கோளம்மிட்டு எழுப்புவாய் என்று ,
நீ இன்று மறைந்ததால் சூரியன் கூட உதிக்க தவிக்கின்றதோ என்னவோ தெரியவில்லையே,
வானம் கூட கூரிகிறதே உன் முகத்தை ஒருமுறை காட்டுங்கள் என் அம்மா என்று,
நீ இல்லாததால் வானமும் கள்ளகிவிட்டதோ என்னவோ தெரியவில்லையே என் அம்மா ,
தாயே தென்னாட்டு வைகை கூட சலசல வென்று வரவில்லையே என் அம்மா ,
அதுக்கும் உன் இழப்பை தாங்கமுடியவிலையோ என்னவோ தெரியவில்லையே என் அம்மா ,
நீ போனதை எண்ணி பயிர்களும் வாடா தவிகிர்தோ என்னவோ தெரியவில்லையே என் அம்மா,
அம்மா நீ தென்னாட்டில் மீண்டும் பிறந்து தவழ வேண்டும் என் அம்மா
தமிழ் தாயின் மொழியால் வளர வேண்டும் என் அம்மா .

எழுதியவர் : மு.சண்முகநாதன் (5-Nov-17, 8:29 pm)
பார்வை : 505

மேலே