மஸ்ஜித் இமாம்களின் ஓர் குரல்
மஸ்ஜித் இமாம்களின் ஓர்குரல்
ஜம்இய்யாவே நீ செய்வது சரிதானா❓
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இஸ்லாமிய சமூகத்துக்கு சேவை செய்யும் அமைப்பு என்று இன்றுதான்(2017-11-01) எனது புத்திக்கு பட்டது.
என்னை மன்னிக்க வேண்டும்.
அந்த கவலையில்தான் இன்று நான் பேசிய ரெகோடின்கள் அமைந்து விட்டது.
இல்லையானால் ஒருபோதும் ஜம்இய்யாவை தரம் குறைத்து பேசிய பழக்கம் இல்லை.
ஜம்இய்யா என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால் 100% வீதம் அடித்து சொல்லலாம்.
100 அல்லது 150 உலமாக்களுக்கு தொழில் வழங்கியுள்ளது.
இவர்கள் மட்டும்தான் ஜம்இய்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
மற்றும் சிலர் ஜம்இய்யா எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்❗
ஏன் இவ்வளவு 15 இற்கும் அதிகமான பிரிவுகளையும் ஆரம்பித்து முன்னெடுத்து செல்கின்ற ஜம்இய்யாவுக்கு பள்ளிவாயல் இமாம்கள் விடயமாக ஒரு பிரிவை ஆரம்பிக்க முடியாமல் போனது❓
பெண்கள் வந்து எங்களுக்கு மகளிர் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓
வாலிபர்கள் வந்து இளைஞர் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓
வியாபாரிகள் வந்து பைதுஸ் ஸகாத் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓
பிறமதத்தினர் வந்து CCC ஆரம்பிக்க சொன்னார்களா❓
சிறுவர்கள் வந்து மக்தப் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓
பொதுமக்கள் வந்து சமூக சேவைப் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓
முதலாலிமார்கள் வந்து ஹலால் பிரிவு ஆரம்பிக்க சொன்னார்களா❓
இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பிறை பார்க்க சொன்னார்களா❓
பாடசாலைகள் வந்து கல்விக் குழு ஆரம்பிக்க சொன்னார்களா❓
மீடியாக்கள் வந்து ஊடகம்/பிரச்சாரம்/வெளியீட்டு பிரிவுகளை ஆரம்பிக்க சொன்னார்களா❓
இல்லையே....❗❗❗
அகில இலங்கை ஜம்ஒய்யத்துல் உலமாதானே ஆரம்பித்தது❓❗
ஏன் பள்ளிவாயல் இமாம்கள் வந்து கூறவில்லை என்பதற்காக மௌனமாக இருக்கிறீர்கள்❓❓❓
பள்ளிவாயல் நிருவாகத்துக்கு பயமா❓
அல்லது பணக்காரர்கள் பகைத்து விடுவார்கள் என்ற பயமா❓
அல்லது சமூகம் ஒதுக்கிவிடும் என்ற பயமா❓
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரை ஏன் உலமாக்கள் சபை என்று வைத்து விட்டு, பள்ளிவாயல் இமாம்கள் விடயமாக கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்கள்❓
சிந்தித்து பாருங்கள்.
தெளிவு கிடைக்கும்.
ஜனாதிபதிக்காக ஜெனீவா வரை சென்றது ஜம்இய்யா❗
அரசியலுக்காக அமைச்சர்கள் வரை சென்றது ஜம்இய்யா❗
அகதிகளுக்காக கடல் கடந்து உதவியது ஜம்இய்யா❗
பிறமத பாடசாலைக்கு விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து கொடுத்தது ஜம்இய்யா❗
நாம் இதுவரை குறை கூறினோமா❓❓❓
இல்லையே....❗
இல்லையே....❗
ஏன் எமக்காக பேச மாட்டீர்கள்❓
ஏன் இமாம்களுக்காக பேச மாட்டீர்கள்❓
ஏன் எம்மை ஒதுக்குகிறீர்கள்❓
கொஞ்சம் மனந்திறந்து சிந்தித்து பார்ப்பீர்களாக.
அல்லாஹ் உங்களது சேவைகளை எமக்கும் விரிவு படுத்துவானாக.
என்றும் அன்புடன்
பௌசுல் அமீர்(முஅய்யிதீ),
பள்ளிவாயல் இமாம்கள் சார்பாக.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
