தன்னம்பிக்கை
இளைஞனே!
நீ......
இயலாமையால் விட்டுவிட்ட
காரியங்களை
இப்போது நினைத்துப்பார்
உன்
ஊதாரித்தனம் தெரியும்
வேலையில்லை வேலையில்லை என்ற
வீண்பேச்சு புரியும்..........
யாரைப்பற்றி என்ன பேசுகிறார்கள்
என்று கேட்பதைவிட
உன்னைப்பற்றியே நினை
உன் நிலையறிந்தால்
நீ உயர்வது நிச்சயம்.