பேருந்து நிலவு

ஏன் இந்த விடுமுறை
ஏனோ இன்னும் தொடருது
அவள் இல்லா நிழற்குடையினுள்
நிழலும்கூட வர மறுக்குது
ஜன்னலோர கம்பிகள்
அவள் கைகள் தேடி அலையுது
பரிட்சைத் தாளும் இன்று
பாதியில் கண்ணீர் சிந்துது
விடுமுறையில் சில நாட்கள் தேயுது
விடியாத ஒரு பெண்ணை தேடுது
மலரால் ஒரு மானிடம் பார்த்தேன்
மயக்கினேனடி உன்னாலே
மாலைக்கருக்கலில் உன்
மடி சாய்ந்திட தோனுது
மழைவானத்தில் ஒருத்துளி தனியே நழுவுது தனிமையில் உன் ஞாபகம் கூடுது
தவறாமல் மனம் தத்தித்தாவுது

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (15-Nov-17, 9:57 pm)
Tanglish : perunthu nilavu
பார்வை : 356

மேலே