திருமணச் சந்தை

மனதில் எத்தனை கனவுகளுடன்,
மணக்கோலத்தில் அலங்கரித்து,
மணமேடையில் மகிழ்ச்சியோடு,
மணப்பெண்ணாய் நின்றாள்...!

திருமணச் சந்தையில் விலைபோன,
திருமகளுக்கு அவன் அன்னை,
தந்த விலையோ முப்பது சவரன்...!

கருநிறம் தானே இவள் தேகம்...!
கலைகொண்டதோ அவளின் முகத்தோற்றம்...!!

வெள்ளைத்தோல் கொண்ட மணமகனுக்கு,
உள்ளம் மட்டும் கருப்பு...!
சிறிது காலத்திலே நகை முழுவதும்,
சேட்டுக்கடையின் கல்லாப்பெட்டியை,
சித்தரிக்கத் தொடங்கியது...!!

இறைவன் கூட இறக்கமற்றவனானான்...!
இந்த பெண்ணின் வாழ்க்கையை,
இடையராத துயரத்திற்கு பரிசாக்கினான்...!!

பிணியின் ஆட்சியில் அவன்...!
பிடிப்பற்றவள் ஆகி நின்றாள்...!!

மருத்துவமனையெறும் போர்க்களத்தில்,
மாத்திரைகளின் படையெடுப்போடு,
காலனை எதிர்த்து அவள்,
கலக்கத்தோடு போராடத் தொடங்கினாள்...!

மனதினது துணிவு குறைந்தது...!
மருத்துவர்களின் காரமும் விட்டுப்போனது...!!
கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்று,
கரம்பிடித்தவனோ கை கழுவினான்...!!!

பெற்றமனம் பித்து என்பதால் என்னவோ,
பெற்றெடுத்தவள் மட்டும் இன்னும்,
பிரியாமல் அவளோடு தத்தளிக்கிறாள்...!

இறைவா இந்த போர்க்களத்தில்,
இப்பெண்ணின் உயிர்ப் போராட்டம்...
வெற்றிகண்டு உயிர் வாழுமா – இல்லை
வாயிற்கதவை காலனுக்குக்காக திறந்து வைக்குமா..?

திருமணமான ஓராண்டில் தான்,
திருப்பங்கள் எத்தனை எத்தனை...!
வாழ்வின் கனவுக் கோட்டை,
வடிவிழந்து நிற்கத்தான் இந்தப்
பிறவி அவளுக்கு அற்பணமானதோ...!!

கேட்கும் நெஞ்சம் துடிக்கிறது...!
கேட்பதற்கு மறந்து போனாயோ...
இறைவா,
இந்தப் பாவையின் வேண்டுதலை...!!

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 8:51 pm)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 750

மேலே