ஒரு தாயின் கனவு

வறுமையில் விழுந்து இருந்தாலும்//
வலியில் தேம்பி அழுது தவிதவிச்சி//
புலம்பி விடாது//

தன் பிள்ளைகளின் வயிறு
காஞ்சு கருவாடாகிப் போயிடாமல் இருக்க//

தான் பசியெல்லாம் கெடந்தாலும் //
பிள்ளையின் நினைவை நெஞ்சமெல்லாம்
ராப்பகலா சுமந்து//

தலையணையில் சாய மறந்து//

தன் கனவை மறந்து//
தன் நலத்தில் பார முகம் இன்றி
தத்து கொடுத்து //

தன்னை வருத்திகிட்டு
தன் பிள்ளை தன்னை படிக்க வைத்து //
அவர்கள் வாழ்வு உயரும் வரை
எதிர்பார்த்து//

தன்னிலே மானம் சேர்த்து//
கூலி வேலையில் கால் வைத்து//

எட்டு கட்ட தூரம்
பாதணியில்லாப் பாதத்துடன்
போகையில்//
பாதமே வலி எடுத்தாலும்
வேலைக்கு போகிறாள்

எழுதியவர் : காலையடி அகிலன் (17-Nov-17, 11:18 am)
Tanglish : oru thaayin kanavu
பார்வை : 276

மேலே