ஒரு தாயின் கனவு
வறுமையில் விழுந்து இருந்தாலும்//
வலியில் தேம்பி அழுது தவிதவிச்சி//
புலம்பி விடாது//
தன் பிள்ளைகளின் வயிறு
காஞ்சு கருவாடாகிப் போயிடாமல் இருக்க//
தான் பசியெல்லாம் கெடந்தாலும் //
பிள்ளையின் நினைவை நெஞ்சமெல்லாம்
ராப்பகலா சுமந்து//
தலையணையில் சாய மறந்து//
தன் கனவை மறந்து//
தன் நலத்தில் பார முகம் இன்றி
தத்து கொடுத்து //
தன்னை வருத்திகிட்டு
தன் பிள்ளை தன்னை படிக்க வைத்து //
அவர்கள் வாழ்வு உயரும் வரை
எதிர்பார்த்து//
தன்னிலே மானம் சேர்த்து//
கூலி வேலையில் கால் வைத்து//
எட்டு கட்ட தூரம்
பாதணியில்லாப் பாதத்துடன்
போகையில்//
பாதமே வலி எடுத்தாலும்
வேலைக்கு போகிறாள்