வாழ்க்கை

வாழ்க்கை ஒற்றைத் தூணோடு
இன்பம் என்ற தேனோடு
வாழ்க்கைக்கு இன்பம் என்ற சொல்லை-அது
பூமிக்கு இறைவன் தந்த பிள்ளை
சொந்தம் என்ற சொல்லுக்குள்ளே
பாசம் இருக்கு-அட
வாழ்க்கை ஒன்றை வென்றிடவே
சொந்தம் மட்டும் தானிருக்கு!
சிறையில் உள்ள மிருகம் போல
தனிமை எதுக்கு-அட
தனிமை என்ற சொல்லைவிட்டு
வெளியே வந்து விண்ணைமுட்டு!
வெற்றித் தோல்வியை வெல்லும்-இந்த
பூமியை வெல்லும்-ஆனால்
சொந்தம் என்ற சிகரம்கண்டால்
விக்கிக்கும் சொல்லும்!
சொந்தம் என்ற வட்டத்தில்-பல
இன்பம் பிறக்கும்-அதை
சுமைகளின்றி ஏற்றிக்கொண்டால்
வாழ்வே இனிக்கும்!
சொந்தம் இல்லாமலே-உலகில்
இன்பம் ஏது?
நெஞ்சே!
இன்பமிருக்கும்
அந்த நொடியில்
உயிர் பிரிதலும்
வாழ்க்கையின் வெற்றிதான்!
நிலத்தில் நீர்வாழும்-கண்ணின்
இமையில் நீர்வாழும்-ஆனால்
சொந்தமுள்ள நெஞ்சிக்குள்ள
இன்பம் தான் வாழும்!
செல்போன் கையோடு-உள்ள
குடும்பம் தனியாடு-அவை
சொந்தமிருந்தும் இன்பத்தை
நம்மாள் சேமிக்க முடியாது!
புன்னகை முகத்தைப் பார்த்து-இருவர்
பேசும்போது-நெஞ்சில்
மனம் அறியா!
துளிப் புரியா!
மனதிற்குள்
ஓர் சிறுசிறு இன்பம்!

எழுதியவர் : sahulhameed (22-Nov-17, 9:14 pm)
சேர்த்தது : HSHameed
Tanglish : vaazhkkai
பார்வை : 419

மேலே