உடல் நலம்
காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.
நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.
உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.
அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.
ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.