ஏய் இதயமே

காதலில் நான்
*************

ஏய்! இதயமே!
அவளைக் கண்டால்
மட்டும் அப்படித் துடிக்கிறாய்?
இருட்டறையில் இருந்துக் கொண்டே
எப்படிக் கண்டறிந்தாய்?
கண்களுக்கும் உனக்கும் கடுதாசி உறவோ?
அவள் கண்களைக் கண்ட கண்களும்
உன்னிடம் சொன்னதோ!
உனக்கும் அவளைக் காண ஆசையா?
மார்பு சதைகளைக் கிழித்து சாளரம் இட்டுக்கொள் ஹஹஹா.......
கோபம் கொள்ளாதே!
அவள் சுவாசத்தைக் குடித்து உன் ஆசையை தீர்த்துக்கொள் அவளுடன் காலங்கள்
கழித்துக் கல்றை போகும் வரை.......

~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Nov-17, 1:22 am)
பார்வை : 666

மேலே