பரிதாபம்

வந்தவன்
போனவன்
ஆண்டதெல்லாம்
அடங்கியிருந்ததன்றே..
கள்ளம்
கபடம்
ஈரமெல்லாம்
கூனி குறுகியதன்றே..
ஓட்டு போட்டு
உனை நீயே விற்றாய்
இனி செல்லா நோட்டாய்
ஆளாகிவிட்டாய்..
மண்னை வெட்டி
வளமாக்கும்
உழவன் உழைப்பும்
வீனாயிற்றே..
பகலவன் விரித்த
கதிரினிலே
தேடிய உணவும்
பறிபோயிற்றே..
மனித தன்மை
மாய்ந்ததினால்
உரிமையாவும்
விலைபோயிற்றே..
நெஞ்சை நிமிர்த்தி
நேர்த்திகளாய்
ஆசை கனாவில்
தவழ்ந்திட நாளுமுன்டோ..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (1-Dec-17, 11:46 am)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : parithaabam
பார்வை : 133

மேலே