எதிர்கவி
பிணியால் தவித்தேன் மருந்தாய் வந்தனை
பிழையால் தவித்தேன் மறுபடி வந்தனை
எதற்காய் தவித்தால் மாங்கல்யம் தருவாய் ???
உள்ளதை சொன்னேன் உணர்வில் இணைத்தனை
உள்ளத்தை சொன்னேன் உயிரில் இணைத்தனை
எதனை சொன்னால் உறவில் இணைப்பாய் ???
யாசகம் வேண்டினேன் வரங்கள் கொடுத்தணை
வாசகம் வேண்டினேன் வாழ்க்கையே கொடுத்தணை
எதை நான் வேண்டினால் நீ என்னுடனே இருப்பாய் ??