பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ஏர்முனை கவிஞர் இரா இரவி

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

ஏர்முனை ! கவிஞர் இரா .இரவி !

மண்கள் இடமாற்றம்
மேலும் கீழும்
ஏர்முனை !

நன்மை செய்திடும்
நல் ஆயுதம்
ஏர்முனை !

விவசாயத்தின்
முதுகெலும்பு
ஏர்முனை !

மண்ணை வளமாக்கும்
மகத்தான மருத்துவர்
ஏர்முனை !

அன்றும் இன்றும் என்றும்
உழவனின் தோழன்
ஏர்முனை !

உழுவதால் உழவன்
பெயர்க்காரணி
ஏர்முனை !

மண்தாளில் கவிதை
எழுதும் எழுதுகோல்
ஏர்முனை !

சகதி படிந்தாலும்
சந்தோசமாக உழைக்கும்
ஏர்முனை !

அமோக விளைச்சலுக்கு
முதல்படி
ஏர்முனை !

உயிர் எடுக்கும் வாள்முனை
உயிர் வளர்க்கும் உணவுக்கு
ஏர்முனை !

பொருட்படுத்தவில்லை
நிலத்தின் வழியை
ஏர்முனை !

போடும் கோலம்
நிலைப்பதில்லை
ஏர்முனை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Dec-17, 8:04 pm)
பார்வை : 133

மேலே