வானம் பார்த்த பூமி- 2

ஆம்... எந்தப் பெற்றோர்களுக்குத்தான் மனம் வராது? தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அடையக்கூடாதென்று..
தன் கணவனின் வயதுமுதிர்ச்சியையும் மகன் மாணிக்கத்தின் முயற்சியின்மையையுங்கண்டு பூலாந்தேவி, மனதில் பாரஞ்சுமந்தவளாகவே இருந்தாள்..
வரம் வாங்கிப் பெற்றெடுத்த ஒற்றைப்பிள்ளையாயினும் மாணிக்கம், வேலைக்குச்சென்று வருமானமீட்டித் தனக்கடுத்ததாக அவன்தான் குடும்பத்தைக்காப்பான் என்பதே அமாவாசையின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாய் இருந்தது.
படித்தது பொறியியல் என்றாலும் தன்னார்வமின்றி ஏதோ ஒரு கட்டாயத்தின்பேரில் நான்கு வருடத்தையும் நிறைவு செய்ததாகவே மாணிக்கத்தின் மனம் அவ்வப்போது நினைத்துக்கொண்டிருந்ததே தவிர அதில் நிலைத்து நிற்க வேண்டுமென்ற எண்ணம் வலுவாயில்லை.

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (7-Dec-17, 8:38 pm)
பார்வை : 109

மேலே