உதிர்ந்ததின் காரணம்

எப்போதோ ஏதோ ஒரு
பறவையின் இறகு
அக்குளத்தில் விழுந்தது
குளத்தின் அலைகளில்
குறுக்கும் நெடுக்குமாய்
தாவித்தாவி
உன் கைகளை அடைந்தது
இப்போது புரிந்தது இறகு
உதிர்ந்ததின் காரணம்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (9-Dec-17, 11:10 am)
பார்வை : 110

மேலே