தனிமையில் நிலவு

யார் யாரோ சொல்ல கேட்டுஇருந்தேன் நிலா என்றுமே
தனிமையில் வாடுகிறது என்று; நம்பவில்லை நான்.
ஆம்; நிலவிற்கு துணைகள் ஏராளம் இவ்வுலகில்,
"அதோ பாரு நிலா" மழலைக்கு சோறு ஊட்டும் அன்னையின்
குரல் கேட்டேன் இரவிலே
"அந்த நிலவினில் உந்தன் முகம் பார்க்கிறேன்" காதலியிடம்
காதலன் சொல்ல கேட்டேன் இரவினிலே
"நிலா இன்னைக்கு வரலயாம்மா" நிலவொளியில் படிக்கும்
ஏழை சிறுமியின் குரல் கேட்டேன் இரவினிலே
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நீரோடி நொடிப்பொழுதில் அண்ணாந்து நிலவை
ரசிக்கும் கண்கள் கண்டேன் இரவினிலே
முழு நிலவை கண்டதும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கடலன்னையின்
களங்கம் இல்ல அன்பை கண்டேன் இரவினிலே
இருள் படர்ந்த காடுகளின் இலைகள் நிலவை கண்டு
இனிமையான காற்றினை வழங்க கண்டேன்
ஓடிடும் ஆறுகள் நிலவினை தமக்குள் தாங்கி
மூழ்கவிடாமல் ஓடிட கண்டேன்
நினைக்க ஒரு மனம் இல்லாமல் ரசிக்க எவரும் இல்லாமல்
இருக்கும் நிலையே தனிமை
அந்த தனிமை நிலவிற்கு ஒரு போதும் இல்லை
நினைக்க இத்தனை துணைகள் இருப்பதால்..

எழுதியவர் : amarnath (26-Dec-17, 1:08 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : thanimayil nilavu
பார்வை : 430

மேலே