பகல் பத்து பதிகம் 3

பதிகம் 3

சிலுவையில் அறையப்படுவதையும்
முள்படுக்கையில் படுப்பதையும்,
ஏன்
கரடு முரடான பாதையில் நடக்கவும்
கனவும், கற்பனையும்
காண்பவன் உண்டா?

இடைமறிக்கும் மூளையை
மனம் புறந்தள்ளுகிறது.

இன்றைய ஆசை,
இன்றையத் தேவை;
ஒளியும் மன உணர்வை
உடலின் தகிப்பை
அறியாப் பிள்ளையாய்
துரத்தும் வெளிமனம்.

உயிர்த் தொடர்ச்சி
தள்ளி விடுகிறது
நீச்சல் பழகென்று.

ஏதோ ஒருகுரல்
மணிஎன ஒலிக்கிறது.
இரவுகளை
வெறிக்க வைக்கிறது.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (30-Dec-17, 10:05 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 38

மேலே