ஏனோ
உன் நினைவை
என் நினைவிலிருந்து அகற்ற
நானும் பல விதங்களில்
முயற்சித்து தோல்வியடைகிறேன்
தோல்வியுற்று சந்தோசம்
அடைகிறேன் ஏனோ ?
கதை கவிதையென எதிலே லயித்தாலும்
அனைத்திலும் நீயே வருகிறாய் ஏனோ ?
உன்னிடத்தில் என்னை
தொலைத்தது தெரிந்தும்
இன்னும் தேடிகொண்டே இருக்கிறேன் ஏனோ ?