ஊடல்
அவள் வார்த்தையில் உடன்படாமலிருக்க
அப்பொழுதே தொடங்கியது கருத்துவேறுபாடு ,
அருகருகே அமர்ந்திருந்தாலும்
அவளின் பார்வை வேறுறொரு திசையில் ,
அரைநொடி மௌனம் காக்காதவள்
அமைதியாய் இருந்தாள் அத்தருணம் ,
அடம்பிடிக்கும் குழந்தையை போல
அம்மௌனம் கலைக்க மறுத்தாள்,
அவள் கோபத்துடன் எழுந்து செல்ல
அவள் போகும் திசையில் என் கண்கள் பயணிக்கின்றன
அவள் திரும்பி வருவாளனே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
