நலமாய்த்தான் நகர்கின்றன நாட்கள்
கொண்டு வரவில்லை ,
கொண்டு போகப்போவதுமில்லை .
இடைப்பட்ட வேளையில்,
விதிக்கப் பட்ட பாதையில்
சென்று கொண்டிருக்கிறேன்
செலுத்தப் பட்டபடி !
நலமாய்த்தான் நகர்கின்றன நாட்கள் ..
இதில் எங்கே இருக்கிறது ?
'நான்' என்பதும் ,
'எனது 'என்பதும் .
உலகம் மிக அழகானதாய் ,
மிக விசாலமானதாய்த் தெரிகிறது ,
இது நினைவுக்கு வரும்போதெல்லாம் !!!!!!!