பொங்கல்

பனி நிறைந்த மார்கழி பறந்து
தை மாதத்துக்கு வழி விட்டது
பகலவன் வானில் வெளி வர
தெரு நடுவில் மண்ணடுப்பு வைத்து
மஞ்சள் இலையுடன் பானை ஏற்றி
பனை ஓலை பற்ற வைத்து
மண் தந்த அரிசி மணிகளை
பசும் பாலில் அள்ளிப் போட்டு
மண்டை வெல்லம் பொடித்து கலந்து
பச்சைக் கற்பூரம் ஏலக்காய் வாசனையேற்ற
மாந்தர் மனம் குதூகலிக்க பொங்கல்
பொங்கி வர பிறந்தது தை
மண்ணை உழுது நெல் மணிகளை
பிரசவித்த உழவர்களுக்கு ஒரு விழா
மண்ணில் ஏர் இழுத்த மாட்டினத்துக்கும்
பேர் சொல்ல ஒரு விழா
தமிழர்களின் விழா தைத் திருவிழா
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் புன்னகை

எழுதியவர் : (15-Jan-18, 4:27 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : pongal
பார்வை : 49

மேலே