நட்பு
செல்வமத்தனையும் இழந்து
தெருவிற்கு வந்துவிட்டான் நண்பன்
அஞ்சாதே , நானிருக்கிறேன் என்று
கூறி கைதூக்கி கொடுத்து அவனுக்கு
புனர்வாழ்வு தந்தான் உயிர் நண்பன்
நல்ல நண்பனின் நட்பில்
ஒரு போதும் மாறுதல் தெரிவதில்லை
பழகிடும் நண்பனின் வாழ்வில்
ஏற்றத்தாழ்வுகள் விதியால்
வந்து சேர்ந்திடினும்
நல்ல நண்பனின் நட்பு
வாழ்வில் வரும்
ஏற்ற தாழ்வுகளினால்
மாற்றம் ஏதும் காணாது