இனிய இளங்காலை நேரம்
இளங்காலை நேரம்
இரவியின் இளங் கதிர்கள்
இரவின் இருட்டை விரட்ட
குணதிசையில் வந்தடையும் நேரம்
நடுப்பகலில் சுட்டெரிக்கும் வெய்யல்
இளங்காலையில் இதம் தந்திடுமே
வண்டினம் சோலையில் முரலும் நேரம்
விதவிதமான வண்ண மலர்கள்
பூத்து குலுங்கும் நேரம் -அதை
தேனுண்ணும் ஈக்கள் மொய்த்திடும் நேரம்
பல்கால் குயிலினங்கள் கூவிடும்
இனிய காலை நேரம் - ஓயாமல் கூவி,
எழுந்திட மனமில்லாது படுக்கையில்
சோம்பி இருக்கும் மனிதரை
எழுப்பிடும் சேவல் கூவிடும் நேரம்
வானில் 'ஓசோன் ' நிரம்பி நிற்கும் நேரம்
அதை அறிந்து வெளியில் வந்து
உலாவருபவர்க்கு நல்ல ஆரோக்கிய
சுகங்ககள் பல சேர்க்கும் நேரம்
தூய செந்தாமரைகள் தடாகத்தில்
பூத்து தலை நிமிர்ந்து ஆர்ப்பரிக்கும் நேரம்
தேவனுக்கு உகந்த நல்ல நேரம்
நமக்கு நித்திய முகூர்த்த நேரம்
படிக்கும் மாணவருக்கும் எழுத்தாளருக்கும்
விஞானிகளுக்கும் கணித மேதைகளும்
கற்பனையை பலமடங்கு கூட்டி வளர்க்கும்
பொன்னான இளங்காலை நேரம்
கடல் அலைகளெல்லாம் நிசப்தமான
அதிகாலை வேளையில் 'ஓம்' என்று
ஆர்ப்பரித்து இறைவனை தொழுதிடும்
தெய்வ நேரம் - மனிதர்கள் நாம் இந்த
நேரத்தின் பயன்கள் அத்தனையும்
அறிந்தும் பயன் அடையாமல்
வீணா இருப்பது ஏனோ தெரியலையே