வலி தீரலயே

நீல வானத்து மை தொட்டு
என் சிந்தை யெனும்
கூர் முனையில் எழுதினேன்
அவள் தொடுத்த வலிகளை!
நீல வானத்து மை தீர்ந்ததடா!
அவள் தொடுத்த வலிகள் மட்டும் இன்னும் தீரலடா!

நீ தொடுத்த தீரா வலிகளை எந்தன் சுவாசத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்!
இவ்வுயிர் உடலைப் பிரிந்தாலும்
நீ தொடுத்த வலியும் பிரிந்திடுமோ! இல்லையோ!
நான் அறியேன்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (22-Jan-18, 7:13 am)
பார்வை : 825

மேலே