மெளனத்தின் விளைவு புரிதலின் வலி பாகம் 1

நாள்-1:

தேன் நிலவின் பொன் ஒளியில் மயங்காத என் கண்கள் மயங்கியது இருட்டில்...!
இது என்னவோ என் கதையின் ஆரம்பம் தான் அன்று இரவு 7 மணி இருக்கும். என் கண்கள் பார்த்தது நிலவை அல்ல நிலவை போன்ற அவளை, பார்த்ததும் பிடித்தது. அதுவரை சாதாரணமாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை மாறியது. அன்றிலிருந்து எல்லோரும் கூறுவது உண்மை என நினைத்தேன் காத்திருந்தேன் மறு நாள் வரை, என் தேவதைக்காக. எல்லோருக்கும் அவரவர் காதலி தேவதை தானே...?
உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்னவென்று எனக்கு தெரியாது ஆனால் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்னவோ வேறு. இரவு முழுவதும் ஒரு வித தயக்கம், அடுத்த நாள் வரும் வரை ஒரு ஆவள், விடிந்தது காத்திருந்தேன் அவளின் வருகைக்காக அன்று வரை பார்த்தது இல்லை அவளை, பின் தொடர்ந்தேன் அவளின்........
தொடரும்...

எழுதியவர் : Mahes (23-Jan-18, 10:28 pm)
சேர்த்தது : Venkatesh
பார்வை : 199

மேலே