வலி

செழித்த விளைச்சளைப்
பார்க்கும் போதெல்லாம்
சாவு விளைச்சலென
செத்துப்போன
தாத்தாவின் நினைவுகளே
வீடுநிறைஞ்சிருந்தது.
மெத்த வீடுகட்ட
உத்திரம் போட்ட வீட்டை
இடித்தப் போது
இடியோசையில்
ஒளிந்துகொண்ட
அப்பாவின் விசும்பல்
அண்டைவீடுவரை பரவியிருந்தது…
வீட்டைவிட்டு போகும்போது
பாரமில்லாமலேயே
படுத்து உருண்ட
அடிமாட்டு விலைக்கு விற்ற
உழவு மாடுகளும்…
உறவெல்லாம்
வீடு நிறைஞ்சிருந்தாலும்
ஏதோ ஒன்றுக்காக
ஏங்கும்
உறவுகளின் ஏக்கத்திலும்
பிரிவுகளின் வலியை
பேசாமல் உணர்ந்தோம்…

எழுதியவர் : Tamildeva (24-Jan-18, 10:35 pm)
Tanglish : vali
பார்வை : 129

மேலே