விலைமாது

வழுக்கிவிழும்
கண்கள்
சமுதாய
அழுக்கை தின்னும்
மீன்கள்
இன்பம் கொடுத்து
துன்பம் வாங்கும்
சோகசந்தை வியாபாரிகள்
ஆயிரம் கைகள்
கசக்கி பிழிந்தாலும்
மீண்டும் மலர்ந்து
வாசம் வீசும் உதிரிப்பூக்கள்
உதிரத்தால் அச்சடிக்கப்பட்ட
வசந்த அழைப்பிதழ்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Feb-18, 9:33 am)
பார்வை : 214

மேலே