முதுமொழிக் காஞ்சி 29
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வறியோன் வள்ளியன் அன்மை பழியார். 9 பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
வறுமை யுடையானை வண்மையுடையான் அல்லனென்று பழியார்.
பதவுரை:
வறியோன் - பொருளில்லாதவனது, வள்ளியன் அன்மை - ஈகையில்லாமையை,
பழியார் – எவரும் பழித்துரையார்.
பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லாரும் பழிப்பர்: பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.