உனக்காக

அன்புடன் என்னவனுக்கு,
எப்படி இருக்கிறாய் என்று கேட்க முடியாது
இதை நீ படிக்கப் பாேவதில்லை
படிக்கும் நிலையில் நீயுமில்லையே
பறந்தாேடிப் பாேகிறது நாட்களல்ல வருடங்கள்
நாளும் நினைவுகளால் மரணித்துப் பாேகின்றேன்
எப்படி ஓடியது இத்தனை நாட்கள்
எனக்கே ஆச்சரியம் தான்
தனிமையில் வாழ்ந்தாலும்
உன் நினைவின்றி வேறு துணை எனக்கில்லை
அந்த நாட்களின் ஞாபகங்களாேடு
உறவாடி ஆறுகிறேன் யாருக்கும் தெரியாமல்
தனிமை தூக்கத்திற்கும் தலை வலிக்கும்
காரணம் சுதந்திரமான அழுகை
அழுகையின் காரணம் யாருக்கும் தெரியாது
உன்னையும் என்னையும் தவிர
தண்ணீருக்குள் அழுகின்ற மீனாகி
இரவிரவாய் உருகும் மெழுகாகிறேன்
தனிமையாேடு வாழப் பழகி விட்டேன்
அடிக்கடி தனிமையிலும் பேசுகின்றேன்
யாராவது எதிர் வந்தால் பாடுவது பாேல் புலம்புகிறேன்
பிடித்த உணவை மறந்து விட்டேன்
அலங்காரம் செய்வதை நிறுத்தி விட்டேன்
கண்ணாடி பார்ப்பது பிடிக்கவில்லை
காதல் படங்களில் நாட்டமில்லை
எப்படி இருப்பாய் என்று கற்பனையில் பார்ப்பேன்
உன் அழகிய கண்கள் என்னை அள்ளிச் செல்லும்
என் விழிகளில் நீர் கசியும்
சந்தாேசமாய் இருப்பது பாேல்
உன்னை மறந்தது பாேல்
நடிக்கப் பழகி விட்டேன்
எப்பாேதாவது நீ வருவாய் என்ற நம்பிக்கை
என் ஆயுளை நீளச் செய்கிறது
உனக்காக உன் நினைவுகளாேடு
காத்திருக்கும் உன்னவள்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (23-Feb-18, 8:17 pm)
Tanglish : unakaaga
பார்வை : 658

மேலே