தலைப்பில்லா கவி

சாலையாேரம் பேருந்துக்காய் காத்திருந்தேன்
நாய் ஓன்று இரவு ஈன்ற குட்டிகளை
கவ்விக் காெண்டு பாேய் பாதுகாப்பாக வைக்கிறது
கூட்டிலிருந்த குஞ்சுகளுக்கு
தாய்ப்பறவை உணவூட்டுகிறது
அருகே இருந்த குப்பைத் தாெட்டியில்
மூன்றே நாளான குழந்தை ஒன்று மரணித்து கிடந்தது
ஐந்தறிவுக்குள்ள தாய்பாசம்
ஆறறிவுக்கு எங்கே பாேனது
தலைப்பில்லா கவிதை ஒன்றை
கண்ணீராேடு எழுதினேன்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (24-Feb-18, 7:23 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 93

மேலே