உயிர் வலி

கோடி கோடியாய்
ஊழல் செய்தவன்
ஒய்யாரமாய் சொகுசு மாளிகையில் அருஞ்சுவை உணவு ருசிக்கிறான் !

வறுமையில் வாடிய
ஏழையோ
பசிக்கு உணவு எடுத்ததை
திருட்டு என குற்றம் சாட்டி
கொலை செய்யப்பட்டு இறக்கிறான் !

மனிதமற்ற மிருகங்களே
உணவு எடுத்ததிற்க்கா உயிர் பலி!
இந்நிலை உங்களுக்கு நேரும்போது தெரியும் உயிர் வலி!

என் சக மனிதனே
புரிந்துக்கொள்
நீ வேறு நான் வேறு இல்லை
நாம் அனைவருமே பூமித்தாய் பெற்றெடுத்த பிள்ளை

எனக்கு நீ துணை உனக்கு நான் துணை நமக்கு நாமே துணை

எழுதியவர் : சூரியன்வேதா (24-Feb-18, 12:37 am)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : uyir vali
பார்வை : 104

மேலே