என் கவிதை உனக்கே உனக்கானது
உன்னை நினைத்து
உனக்கே உனக்காக
எழுதும் வரிகளை
எல்லோரும் படிக்க பதிகிறேன்...
எல்லோர் முன்னிலையிலும்
என் கரம் பற்றி
என்னை உனக்கே
உனதாக்கிக் கொள்ள
என் நெஞ்சோடு சேர
என் கழுத்தில் நீ தாலி கட்டுவது போல்...
எல்லோரும் என் கவிதையை படிக்கலாம்...
ஆனால் என் கவிதை உனக்கே உனக்கானது...என் கவியே...
என்னை போல்..
என் இதழ்கள் உன் இதழ்களில் மட்டுமே பதியும்...பொருந்தும்...
உன்னையும் என்னையும் போல்...
உன் மனைவி
~ பிரபாவதி வீரமுத்து