விடா முயற்சி

விடா முயற்சி போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள, ஓடி ஒளிந்தான், அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிக சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான், வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிறகு ஓடி சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். ஒரு நாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்த குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் ஒரு செயல் அவனை ஈர்த்தது, குகையின் ஒரு பக்கத்தினுள் ஒரு வலையை பின்ன மகி கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது, ஆனால் சுவரின் மீது ஊர்ந்து செல்லும்போது வலையினில் பின்னிய நு◌ால் ஒன்று அறுந்து சிலந்தி கீழே விழுந்தது. அவவாறு பலமுறை நிகழ்ந்தது. அது தன்னுடைய முயற்சியை கைவிடாமல் மறுபடியும முயன்று கொண்டே இருந்தது. கடைசியில் வலையை பின்னி டமுடித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அரசன் இந்த சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை,நான் ஏன் விட வேண்டும் என யோசித்தார். நானோ ஒரு அரசன் ◌நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி மீண்டும் தன்னுடைய எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான்,அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிகையான ஆட்களை சேர்த்தான், தன் எதிரிகளிடம் தீவீரமாக போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் அடைந்தான். அதனால் தன் அரசை திரும்ப பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த சிலந்தியை அவன் மறக்கவில்லை. அதுபோல தான் நாம் வாழ்க்கையில் முன்னேற உதவுபவரை மறவக் கூடாது..

கௌசி

எழுதியவர் : கௌசல்யா (2-Mar-18, 2:57 pm)
சேர்த்தது : GOWSALYA
Tanglish : VIDAA muyarchi
பார்வை : 198

மேலே